ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் நடிகையானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீரரான இவர், பின்னர் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். தற்போது சிவலிங்கா, வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் பி.வாசுவின் சிவலிங்கா படம் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், முதல் பாகத்தில் ஜோதிகா நடித்ததற்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரித்திகா சிங்.
இந்நிலையில், குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா சூர்யாவை வைத்தும் ஒரு படம் இயக்கயிருந்தார். அதில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்றபோது ரித்திகா சிங்கின் பெயரை டிக் அடித்திருக்கிறார் சூர்யா. அதையடுத்தும் அவரிடமும் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தனர். ஏற்கனவே சூர்யா நடித்த சில படங்களைப்பார்த்து இம்ப்ரஸாகியிருந்த ரித்திகாசிங், சூர்யாவுடன் டூயட் பாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்.
ஆனால், மருது படத்தின் தோல்விக்குப்பிறகு முத்தையா இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை. விளைவு, அந்த கதையை தனது முதல் படநாயகனான சசிகுமாரிடம் சொல்லி ஓகே செய்து இப்போது கொடிவீரன் என்ற பெயரில் அந்த கதையை இயக்குகிறார் முத்தையா. ஆக, சூர்யாவுக்கான கதையில் சசிகுமார் நடிக்கப்போகிறார். ஆனால், இந்த படம் மூலம் சூர்யாவுடன் இணைந்து விடலாம் என்கிற ஆவலில் இருந்த ரித்திகா சிங்கின் ஆசைதான் நிராசையாகி விட்டது.