தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் நடிகையானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீரரான இவர், பின்னர் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். தற்போது சிவலிங்கா, வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் பி.வாசுவின் சிவலிங்கா படம் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், முதல் பாகத்தில் ஜோதிகா நடித்ததற்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரித்திகா சிங்.
இந்நிலையில், குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா சூர்யாவை வைத்தும் ஒரு படம் இயக்கயிருந்தார். அதில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்றபோது ரித்திகா சிங்கின் பெயரை டிக் அடித்திருக்கிறார் சூர்யா. அதையடுத்தும் அவரிடமும் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தனர். ஏற்கனவே சூர்யா நடித்த சில படங்களைப்பார்த்து இம்ப்ரஸாகியிருந்த ரித்திகாசிங், சூர்யாவுடன் டூயட் பாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்.
ஆனால், மருது படத்தின் தோல்விக்குப்பிறகு முத்தையா இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை. விளைவு, அந்த கதையை தனது முதல் படநாயகனான சசிகுமாரிடம் சொல்லி ஓகே செய்து இப்போது கொடிவீரன் என்ற பெயரில் அந்த கதையை இயக்குகிறார் முத்தையா. ஆக, சூர்யாவுக்கான கதையில் சசிகுமார் நடிக்கப்போகிறார். ஆனால், இந்த படம் மூலம் சூர்யாவுடன் இணைந்து விடலாம் என்கிற ஆவலில் இருந்த ரித்திகா சிங்கின் ஆசைதான் நிராசையாகி விட்டது.