துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் நடிகையானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீரரான இவர், பின்னர் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். தற்போது சிவலிங்கா, வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் பி.வாசுவின் சிவலிங்கா படம் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், முதல் பாகத்தில் ஜோதிகா நடித்ததற்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரித்திகா சிங்.
இந்நிலையில், குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா சூர்யாவை வைத்தும் ஒரு படம் இயக்கயிருந்தார். அதில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்றபோது ரித்திகா சிங்கின் பெயரை டிக் அடித்திருக்கிறார் சூர்யா. அதையடுத்தும் அவரிடமும் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தனர். ஏற்கனவே சூர்யா நடித்த சில படங்களைப்பார்த்து இம்ப்ரஸாகியிருந்த ரித்திகாசிங், சூர்யாவுடன் டூயட் பாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்.
ஆனால், மருது படத்தின் தோல்விக்குப்பிறகு முத்தையா இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை. விளைவு, அந்த கதையை தனது முதல் படநாயகனான சசிகுமாரிடம் சொல்லி ஓகே செய்து இப்போது கொடிவீரன் என்ற பெயரில் அந்த கதையை இயக்குகிறார் முத்தையா. ஆக, சூர்யாவுக்கான கதையில் சசிகுமார் நடிக்கப்போகிறார். ஆனால், இந்த படம் மூலம் சூர்யாவுடன் இணைந்து விடலாம் என்கிற ஆவலில் இருந்த ரித்திகா சிங்கின் ஆசைதான் நிராசையாகி விட்டது.