துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
இளையராஜாவின் இசையில் அதிக பாடல்களை பாடியவர்கள் எஸ்.பி.பால சுப்ரமணியம், மனோ, சித்ரா ஆகியோர். இந்நிலையில், சமீபகாலமாக திரைப் படங்களில் தனக்கு பாட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வெளிநாடுகளில் கச்சேரிகள் நடத்தி வருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இந்நிலையில், இளையராஜா பெற்றுள்ள காப்பி ரைட்ஸ் பிரச்னை காரணமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட இளையராஜாவின் இசையில் பாடல்கள் பாடிய பாடகர் பாடகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து எஸ்.பி.பி., சட்டத்தை தான் மதிப்பதாகவும், இனி அவரது பாடல்களை பாடப்போவது கிடையாது என்றும் கூறி விட்டார். பாடல்களை பாடியவர்களையே பாடக்கூடாது என்று சொல்வது முட்டாள்தனமானது என்று இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் அவருக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து, இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் அவரது இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கி, இது சட்டப்படி சரி, ஆனால் இளையராஜாவும் இதை பின்பற்றுவாரா...? என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மதன் கார்கி விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், சட்டப்படி பார்க்கும் போது இளையராஜா தரப்பினர் செய்தது சரியே, ஒரு பாடல் அந்த பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கே சொந்தமானது. பாடலுக்கான உரிமை என்ற கோணத்தில் பார்க்கும் போது, அதனை நட்பு என்ற வீதத்தில் ஒதுக்க முடியாது. இந்த பிரச்சனை குறித்து இளையராஜா அனுப்பிய நோட்டீசில் அதுபற்றி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடலானது திரையரங்கு தவிர்த்து வெளி நிகழ்ச்சிகளில் மக்கள் முன்பு பாடப்பட்டால், அந்த நிகழ்ச்சிக்காக வசூலிக்கப்படும் தொகை இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளரிடம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக ஐபிஆர்எஸ் என்ற அமைப்பின் மூலம் நிகழ்ச்சிகளுக்காக வசூலிக்கப்படும் தொகை சேரவேண்டியவர்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. ஆனால் இளையராஜா தரப்பை பொறுத்தவரை அவ்வாறு செய்யாமல், தாமாகவே இந்த உரிமை குறித்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இளையராஜாவே அவர் இசையமைத்துள்ள பாடல்களை இசைக்க, குறிப்பிட்ட தயாரிப்பளர் மற்றும் பாடலாசிரியரிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் பொது மேடைகளில் இசையமைத்தால், அவருக்கு எதிராக பாடலாசிரியரோ, தயாரிப்பாளரோ வழக்கு தொடரலாம். அவ்வாறு வழக்கு தொடரும் பட்சத்தில், இளையராஜாவே மற்ற மேடைகளில் இசையமைக்க முடியாது. இது பலருக்கு கசப்பாக இருந்தாலும் இந்த விஷயத்தை ராஜா சார் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மதன்கார்கி கூறியுள்ளார்.