Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா செய்தது சரி... - மதன் கார்க்கி

20 மார், 2017 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-did-right-says-Madhankarky

இளையராஜாவின் இசையில் அதிக பாடல்களை பாடியவர்கள் எஸ்.பி.பால சுப்ரமணியம், மனோ, சித்ரா ஆகியோர். இந்நிலையில், சமீபகாலமாக திரைப் படங்களில் தனக்கு பாட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வெளிநாடுகளில் கச்சேரிகள் நடத்தி வருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.


இந்நிலையில், இளையராஜா பெற்றுள்ள காப்பி ரைட்ஸ் பிரச்னை காரணமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட இளையராஜாவின் இசையில் பாடல்கள் பாடிய பாடகர் பாடகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.


மேலும், இதுகுறித்து எஸ்.பி.பி., சட்டத்தை தான் மதிப்பதாகவும், இனி அவரது பாடல்களை பாடப்போவது கிடையாது என்றும் கூறி விட்டார். பாடல்களை பாடியவர்களையே பாடக்கூடாது என்று சொல்வது முட்டாள்தனமானது என்று இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் அவருக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து, இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் அவரது இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கி, இது சட்டப்படி சரி, ஆனால் இளையராஜாவும் இதை பின்பற்றுவாரா...? என்று பதிவிட்டுள்ளார்.


இது தொடர்பாக மதன் கார்கி விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், சட்டப்படி பார்க்கும் போது இளையராஜா தரப்பினர் செய்தது சரியே, ஒரு பாடல் அந்த பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கே சொந்தமானது. பாடலுக்கான உரிமை என்ற கோணத்தில் பார்க்கும் போது, அதனை நட்பு என்ற வீதத்தில் ஒதுக்க முடியாது. இந்த பிரச்சனை குறித்து இளையராஜா அனுப்பிய நோட்டீசில் அதுபற்றி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.


ஒரு பாடலானது திரையரங்கு தவிர்த்து வெளி நிகழ்ச்சிகளில் மக்கள் முன்பு பாடப்பட்டால், அந்த நிகழ்ச்சிக்காக வசூலிக்கப்படும் தொகை இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளரிடம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக ஐபிஆர்எஸ் என்ற அமைப்பின் மூலம் நிகழ்ச்சிகளுக்காக வசூலிக்கப்படும் தொகை சேரவேண்டியவர்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. ஆனால் இளையராஜா தரப்பை பொறுத்தவரை அவ்வாறு செய்யாமல், தாமாகவே இந்த உரிமை குறித்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இளையராஜாவே அவர் இசையமைத்துள்ள பாடல்களை இசைக்க, குறிப்பிட்ட தயாரிப்பளர் மற்றும் பாடலாசிரியரிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் பொது மேடைகளில் இசையமைத்தால், அவருக்கு எதிராக பாடலாசிரியரோ, தயாரிப்பாளரோ வழக்கு தொடரலாம். அவ்வாறு வழக்கு தொடரும் பட்சத்தில், இளையராஜாவே மற்ற மேடைகளில் இசையமைக்க முடியாது. இது பலருக்கு கசப்பாக இருந்தாலும் இந்த விஷயத்தை ராஜா சார் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.


இவ்வாறு மதன்கார்கி கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in