விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
'கபாலி' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் சில காட்சிகள் மட்டுமே படமாக வேண்டியுள்ளது. அது எப்படியும் இந்த மாதத்தில் முடிந்துவிடும் என்கிறார்கள். அதன் பின் சில நாட்கள் மட்டுமே ஓய்வெடுத்துக் கொள்ளும் ரஜினிகாந்த் அடுத்து பா.ரஞ்சித் படத்தில் நடிக்க வந்துவிடுவாராம்.
இந்தப் புதிய படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் அவருடைய சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இன்னும் இந்தப் படத்தின் நாயகி யார் என்பது முடிவாகவில்லை. சில வாரங்களுக்கு முன்பு ஹிந்தி நடிகையான வித்யா பாலன் நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. அவரும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஹாலிவுட் வரை சென்று விட்ட தீபிகா, தமிழ்ப் படங்களில் நடிக்க முன் வருவார் என்பது சந்தேகம்தான்.
'கபாலி' படம் போலவே தமிழில் பிரபரமில்லாத ஒரு ஹிந்தி நடிகையை அழைத்து வந்தாலும் வருவார்கள் போலிருக்கிறது.