டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனக்கு வர போகும் கணவர் ஆசைக்கு ஒன்றும், அன்புக்கு ஒன்றும் என இரண்டு மனைவிகள் உடையவராக இருப்பார் என்று கிளி ஜோசியம் சொன்னதால், அதிர்ச்சியாகி இருக்கிறார் நடிகை தன்ஷிகா. பாலிமர் டிவியில் ஞாயிறுதோறும் ஒன்பது மணியளவில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சம்திங் சம்திங் வித் ஸ்டார்ஸ். இந்த வாரம் "பேராண்மை மற்றும் அரவான் படங்களின் நாயகி தன்ஷிகா கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. அயன் ஜெகன் தொகுப்பாளராக இருந்து நடிகை தன்ஷிகாவோடு மிகவும் மாறுபட்ட முறையில் சுவாரஸ்யமாக கலந்துரையாடிய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களோடுஆடிப்பாடி நிகழ்ச்சியை கலகலப்பூட்டிய, நடிகை தன்ஷிகா தனது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் அரவான் படம் பற்றிய வெளிவராத தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அதோடு அந்நிகழ்ச்சியின் ஒரு அம்சமான கிளி ஜோசியத்தில் தன்ஷிகா என் வருங்காலக் கணவர் எப்படி இருப்பார்? எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் என்று கேட்டார்.
அதற்கு கிளி எடுத்துக் கொடுத்த சீட்டை வைத்து ஜோசியர், உங்கள் கணவர் அன்புக்கு ஒன்றும், ஆசைக்கு ஒன்றும் வச்சிருப்பார் என்று பதிலளித்தார்." உடனே அய்யய்யோ எனக்கு அப்படிப்பட்ட கணவரே வேண்டாம்." எனக்காக மட்டுமே வாழும் அன்புகொண்டவராக அவர் இருக்கவேண்டும் என்று பதறினார். இந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஞாயிறு அன்று பாலிமர் டிவியில் ஒன்பது மணியளவில் ஒளிபரப்பாக இருக்கிறது.