ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல படங்களில் வில்லன் உள்பட பலவேறு கேரக்டர்களில் நடித்தவர் மைம்கோபி. தற்போது திரைக்கு வந்துள்ள கட்டப்பாவை காணோம் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர், தற்போது வேலைக்காரன், நெடுநெல்வாடை உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில், விரைவில் ஒரு படத்தில் தான் கதையின் நாயகனாக நடிக்கப்போவதாக சொல்கிறார் மைம்கோபி.
அந்த படம் குறித்து அவர் கூறுகையில், ஒரு நல்ல நடிகனுக்கான விசயம் என்னவென்றால் எந்த மாதிரியான வேடம் என்றாலும் நடிக்க வேண்டும். ஒருத்தனை நல்லவனாக காட்டுவது எளிது. கெட்டவனாக காட்டுவது கஷ்டம். என்னைப்பொறுத்தவரை வில்லனாக நடிப்பது எனக்கு எளிதான விசயம். அந்தவகையில், முதலில் வில்லனாக ரசிகர்கள் முன்பு நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படி இப்போது வில்லனாகி விட்டேன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வில்லனாக நடித்து வருகிறேன். முக்கியமாக எந்த வேடம் கொடுத்தாலும் மைம்கோபி நடிப்பார் என்றொரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது.
இந்நிலையில், கதையின் நாயகனாக நடிக்க இரண்டு இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லியிருக்கிறார்கள். அதில் ஒரு படத்தை பாலாவிடத்தில் உதவியாளராக பணியாற்றிய தாயுமானவன் என்ற எனது நண்பர் இயக்குகிறார். இந்த படத்தில் கதைதான் ஹீரோ. நான் இல்லை. அது ஒரு பேமிலி டிராமா. எல்லோருடைய மனதையும் டச் பண்ணக்கூடிய கதை. விரைவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் நான் டூயட்டெல்லாம் பாடவில்லை. லீடு ரோலில் நடிக்கிறேன் அவ்வளவுதான் என்கிறார் மைம் கோபி.