ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திறமையிருந்தும் எத்தனையோ கலைஞர்கள் சரியான வாய்ப்பின்றி சினிமா கனவோடு இன்னும் கோடம்பாக்கத்தை சுற்றி வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம், வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தவாரம் இரண்டு புதிய இயக்குநர்களின் படங்கள் வெளிவந்துள்ளன. இரண்டு படங்களிலும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மீனை மையமாக வைத்து வெளியாகியுள்ள சிபிராஜின் கட்டப்பாவ காணோம் படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே தெரிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வசனங்கள் ரசிக்கும் படி இல்லை.
கட்டப்பாவ காணோம் படத்தை கூட ஒரு வகையில் ஏற்று கொள்ளலாம். ஆனால் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள புரூஸ் லீ படத்தை யாரும் ஏற்கவே மாட்டார்கள். தொடர்ந்து ஜிவி பிரகாஷ் குமார் இதுபோன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். புரூஸ் லீ படத்தை குழந்தைகள் மற்றும் குடும்பமாக சென்று யாரும் படம் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாச வசனங்கள் படம் முழுக்க பரவி கிடக்கிறது. ஜிவி பிரகாஷ் மீது ஆபாச நடிகர் என்ற முத்திரை விழுந்துவிட்டது. அவர் பேசாமல் நடிப்பதை விட்டுவிட்டு இசையமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.
என்ன தான் நடிகர்கள் இந்த மாதிரி படங்களில் நடித்தாலும் இதற்கு முழுக்க காரணம் இயக்குநர்களாகிய படைப்பாளிகள் தான். எப்படி இதுபோன்று ஒரு கதையை சினிமாவாக எடுக்க முன் வருகிறார்கள் என்று தெரியவில்லை. புருஸ் லீ படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன், இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளராம். தயவு செய்து அவரின் பெயரை சொல்லாதீர்கள்.
படைப்பாளிகள் பொறுப்புடன் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமுதாய நலனில் அக்கறை கொண்டு தங்கள் படைப்புகளை படமாக்கினால் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்கள் கை கொடுத்து தூக்கிவிட காத்திருக்கின்றனர். அதைவிடுத்து இதுபோன்ற படங்களை இயக்கி அவப்பெயர் ஏற்படுத்த வேண்டாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.