அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாளத்தில் வெளியாகும் படங்களில் நல்ல முயற்சிகளை மேற்கொண்ட படங்கள் பற்றி அவ்வப்போது பாராட்டுவார் மோகன்லால். ஆனால் சமீப காலங்களில் முதன்முறையாக தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு படத்திற்கு ரசிகர்களிடம் ஆதரவு தாருங்கள் என கேட்டு ஆச்சர்யப்ப்பட வைத்துள்ளார் மோகன்லால்.. வரும் மார்ச்-24ஆம் தேதி வெளியாக இருக்கும் 'டேக் ஆப் படத்திற்கு தான் மோகன்லால் ஆதரவு கேட்டுள்ளார்.. இந்தப்படத்தின் கதாநாயகர்களாக நடித்திருப்பது குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் மற்றும் ஆசிப் அலி ஆகிய மூவரும் தான்.
ஆனால் மோகன்லால் இந்தப்படத்தின் மீது கவனத்தை திருப்ப காரணம் இந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தான்... ஆம்.. கடந்த வருடம் மறைந்த இயக்குனர் 'ட்ராபிக்' புகழ் ராஜேஷ் பிள்ளையின் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் தான் இது,.. விஸ்வரூபம்' பட எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பார்வதி கதாநாயகியாக நடித்துள்ளார்..