ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்; அவர் கூறியதாவது: மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக தொண்டனாக வருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பரிந்துரை செய்த தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். சுத்தமான அரசியல்வாதிகள் மட்டுமே உள்ள பாஜ.,வில் இருப்பது பெருமைப்படுகிறேன். வேட்பாளரானதால் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு உற்சாகமாக உள்ளது. சட்டசபையில் எனக்கு நாற்காலி ரெடியாவது இப்போதே எனக்கு தெரிகிறது. மாற்றத்தை கொண்டு வருபவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்றார்.