தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரெமோ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் வேலைக்காரன். மோகன்ராஜா இயக்கி வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ரெமோவை மிஞ்சும் சூப்பர் ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று சிவகார்த்திகேயனும், தனி ஒருவனை விட மெகா ஹிட்டாக கொடுத்து விட வேண்டும் என்று மோகன்ராஜாவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
மேலும், பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ-ஹீரோயின், டெக்னீசியன்கள், மற்ற பணியாளர்கள் என மூன்று வகையான உணவுகள் மதிய இடைவேளையின்போது பரிமாறப்படும். ஆனால், இந்த வேலைக்காரன் படத்தைப்பொறுத்தவரை அனைவருக்குமே ஒரே மாதிரியான உணவுகள்தான் பரிமாறப்படுகிறதாம். படப்பிடிப்பு தொடங்கியபோதே இங்கே நாம் அனைவரும் ஒன்றுதான். அதனால் யாரையும் பிரித்துப்பார்க்க வேண்டாம். குறிப்பாக, சாப்பாடு விசயத்தில்கூட அனைவரும் ஒரேமாதிரியான உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும். ஹீரோ, ஹீரோயினுக்கென்று தனிப்பட்ட உணவுகள் தேவையில்லை என்று கூறி விட்டாராம் சிவகார்த்திகேயன். இதை வேலைக்காரன் படக்குழுவில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.