அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஈராஸ் இன்டர்நேசனல் தயாரித்துள்ள படம் ஒரு கிடாயின் கருணை மனு. காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் சுரேஷ் சங்கைய்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விதார்த், ரவீணா உள்பட பலர் நடித்துள்ளனர். ரகுராம் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழாவில், நடிகர் சங்கத்தலைவர் நாசர், இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டனர். அப்போது பிரபுசாலமன் பேசுகையில்,
எனக்கு இந்த மேடையை பார்க்கும்போது மீண்டும் மைனா மேடையை பார்ப்பது போல் உள்ளது. இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. சத்யம் தியேட்டரில் கமல் சார் ஆடியோவை வெளியிட்டார். அவர் மேடையில் உட்கார்ந்ததும் என்னை அழைத்து படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்களை கேட்டுக்கொண்டிருந்தார். கதாபாத்திரங்களின் பெயர் எந்த படத்தில் பேசப்படுதோ, அந்த படம் பதினாறு வயதினிலே, மைனா வரிசையில் இடம் பெறும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற மாதிரி இந்த ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் போஸ்டரில் ஒரு கிடாயின் தலையை நடுவில் போடுவதற்கே ஒரு டைரக்டருக்கு துணிச்சல் வேண்டும்.
இந்த மாதிரி படங்களைத்தான் ஆடியன்ஸ் ரசிக்கிறார்கள் இது ஒரு மினிமம் கேரண்டி. என்னோட கும்கி படத்தை யானை படம் என்றார்கள். அதேபோல் இந்த படத்தை ஆட்டு படம் என்பார்கள். ஒரு அடையாள திரைப்படமாகத்தான் இருக்கும். இன்றைக்கு யானைகள் இல்லேன்னா காடுகள் கிடையாது. காடுகள் இல்லையென்றால் மழை கிடையாது. ஆற்று வெள்ளம் கிடையாது. அதனால் எனது அடுத்த திரைப்படத்தில் அதை இன்னும் ஆழமாக சொல்லப்போகிறேன்.
சமீபத்தில் வந்த திரைப்படங்களில் துருவங்கள் பதினாறு, மாநகரம், அந்த வரிசையில் இந்த படமும் இடம்பெற்று, மீண்டும் சினிமாவுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த விழாவின் நாயகன் ரகுராம். அவரது இசையில் ஒரு மெச்சூரிட்டி உள்ளது. தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. அதேமாதிரி பிரவிண் எடிட்டர். சரண் கேமராமேன் என இது ஒரு நல்ல டீம்.
இந்த படத்திற்காக காட்டுப்பகுதிகளில் செருப்பே போடாமல் கஷ்டப்பட்டு நடித்ததாக சொன்னார்கள். அது கஷ்டமே கிடையாது. ஹாலிவுட் படங்களை எடுத்துப்பார்த்தால் நாமெல்லாம் இன்னும் ஒன்னுமே பண்ணல. நானெல்லாம் இதுவரை கிரீன்ஸ் ஏரியாவுக்கு போய்க்கொண்டிருந்தேன். ஆனால் இந்த படத்தில் பொட்டல் காடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் பனங்காடுகள், கள்ளிச்செடி முள்ளுச்செடிகள்தான் உள்ளது. அந்த மண்ணை சார்ந்த மனிதர்களாகவே அனைவருமே தெரிகிறார்கள். அதுதான் சக்சஸ். எந்த அளவுக்கு நம்மளோட திரைப்படங்கள் கலாச்சாரங்களை பிரதிபலிக்கிறதோ இப்போது நாமெல்லாம் உலக அளவில் உயர்வோம். அதுதான் உலக சினிமா. தமிழ்த் திரைப்படங்களும் நாளை உலக சினிமாவாக மாறனும். அதுதான் என்னோட ஆசை என்றார் பிரபுசாலமன்.