டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காதலுக்கு கோட்டை கட்டி கவனம் ஈர்த்த தேவயானிக்கு இப்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. அம்மா, அண்ணி கேரக்டரில் தான் நடிக்க அழைக்கிறார்கள். இதனால் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த தேவயானி இப்போது மை ஸ்கூல் என்ற மலையாளப் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் ஒரு குழந்தை வெறிநாய் கடிக்கு உள்ளாகி மீண்ட கதையைத்தான் மை ஸ்கூல் படமாக உருவாக்குகிறார்கள். இதனை பப்பன் பயட்டுவில்லா இயக்குகிறார். தேவயானி மகாலட்சுமி என்ற பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். அவரது தந்தையாக மது நடிக்கிறார். கலாபவன் மணி நடித்துள்ள கடைசி மலையாளப் படம் இது. சமுத்திரகனி, கொச்சு பரம்மன், சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ் நாட்டு ஆசிரியராக சமுத்திரகனி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானி ரீ-என்ட்ரி ஆகிறார்.
மலையாள சினிமா தேவயானிக்கு புதிதில்லை. 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக சர்கார் காலனி படத்தில் நடித்திருந்தார். மை ஸ்கூல் தேவயானிக்கு மலையாள சினிமா கதவை மீண்டும் திறக்குமா என்று படம் வெளிவந்த பிறகு தெரிய வரும்.