டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் டீஜே படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பின்னர் கோலிவுட் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கதையாசிரியர் வம்சி இயக்குனராக அறிமுகமாகும் நா பேரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அல்லு அர்ஜூன் கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே சிரஞ்சீவியும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ரேஸ் குர்ராம் படப்புகழ் வம்சி இயக்கத்தில் தேசபக்தி படமாக நா பேரு சூர்யா திரைப்படம் உருவாகவுள்ளது. வம்சி முதலில் இக்கதையை ஜூனியர் என்.டி.ஆரிடம் கூறினார். அவர் மறுப்பு தெரிவிக்கவே அல்லு அர்ஜூன் இப்படத்தில் நடிக்கின்றார். சிரஞ்சீவியின் சகோதரரும் தயாரிப்பாளருமான நாகபாபு இப்படத்தை தயாரிக்கின்றார்.