தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஹிந்துபூர் தொகுதி எம்.எல்.ஏவாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகர் பாலகிருஷ்ணா பணியாற்றி வருகின்றார். சட்டமன்ற தேர்தலில் பாலகிருஷ்ணாவின் தொகுதியில் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சியின் சார்பில் போட்டியிடுவேன் என அறிவித்திருப்பது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனசேனா கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பவன் கல்யாண், 2019ல் ஆந்திராவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அனந்தபூர் மாவட்டத்தில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இது பாலகிருஷ்ணாவின் தொகுதியாகும். திரைப்படங்களில் மோதிக்கொண்ட பாலகிருஷ்ணாவும் பவன் கல்யாணும் தேர்தலிலும் மோதிக்கொள்ளவுள்ளனர். இதனால் ஆந்திராவின் சட்டமன்ற தேர்தல் மேலும் பரபரப்படையவுள்ளது.