ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‛பத்மாவதி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்கியதோடு ஷூட்டிங் ஸ்பாட்டை தீ வைத்தும் கொளுத்தினர். இதனால் படம் சம்பந்தப்பட்ட ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. பத்மாவதி படக்குழு மீது இரண்டாவது முறையாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுதொடர்பாக திரையுலகினர் பலரும் சஞ்சய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகரும் பன்சாலிக்கு குரல் கொடுத்துள்ளார்
பாகுபலி-2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது இதுப்பற்றி பேசிய கரண் ஜோகர், என்ன நடந்தது என்று சஞ்சய் லீலா பன்சாலியுடன் பேசினேன். ஒரு சினிமாக்காரனாக மிகவும் வருந்தினேன். இந்திய போன்ற அருமையான நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தப்பட செய்கின்றன. சஞ்சய்க்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இந்தமாதிரி சூழலில் நாம் அனைவரும் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் அவரது படக்குழுவுக்கு குரல் கொடுக்க வேண்டும். இனி இதுபோன்று ஒரு சம்பவம் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் நடக்காது என நம்புகிறேன் என்றார்.