ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியாவில் ஆண்டு தோறும் அறிமுகமாகும் சிறந்த புதுமுக இயக்குனர்களுக்கு கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த இளம் இயக்குனர் ஸ்ரீனிவாஸ் சார்பில் இந்த விருதை அவரது குடும்பத்தினர் கடந்த 19 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்கள்.
2016ம் ஆண்டுக்கான விருது கோதி பண்ணா சாதாரன மைகட்டு என்ற கன்னட படத்தை இயக்கிய ஹேமந்த்ராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைந்து போன தன் தந்தையை தேடிச் செல்லும் ஒரு மகனின் கதை. அந்த தேடலில் அவன் சந்திக்கும் மனித உறவுகள், இன்ப, துன்பங்கள்தான் கதை. ஏற்கெனவே பல விருதுகளை பெற்றுள்ள இந்தப் படம் தற்போது கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருதுக்கும் தேர்வாகி உள்ளது.
இயக்குனர் ராஜேந்திர பாபு சிங், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், தயாரிப்பாளர் கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் இந்தப் படத்தை தேர்வு செய்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 12ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது. இதில் முன்னணி திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.