மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் இனி கணக்கு வைத்திருக்க வேண்டுமானால் 5 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் கட்டாய இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். ஆனால் தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்கினால் 50 ரூபாய் இருப்பு இருந்தால் போதும். இதனால் பலரும் தற்போது தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி வருகிறார்கள். தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஆரி, மாணவர்களுடன் இணைந்து ஒரு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கியுள்ளார். மக்களை சந்தித்து தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதுகுறித்து ஆரி கூறியிருப்பதாவது:
வங்கிக் குளறுபடிகளினால் பாதிக்கப்படும் சாமன்ய மக்களுக்கு தீர்வாக அஞ்சலகங்களில் 50 ரூபாய் கையிருப்பில் அனைத்து வகை பயன்பாடுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடத்தில் பரப்புவதில் ஒரு தமிழனாய் இந்த விழிப்புணர்வு புரட்சியை, மாணவச் சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஆரம்பித்ததில் நான் பெருமை கொள்கிறேன். இந்தச் செய்தியை விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவோம். நாம் மாறினால் மாற்றங்கள் உருவாகும். மக்களிடமும் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழனாய் நான் உருவாக்கிய இந்த மாற்றம் இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்கு ஒத்துழைப்பு தந்த மாணவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.