அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்து பாலியல் சித்ரவதையை தொடர்ந்து, கேரள மாநிலம் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான இடமாக இல்லை என கேரளாவில் மட்டுமல்ல, இங்குள்ள குஷ்பு முதற்கொண்டு பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது மலையாள திரையுலகில் உள்ளவர்களை காயப்படுத்தியதோ இல்லையோ, கேரள காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. அதனால் இப்போது கேரள காவல்துறை, பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு 'பிங்க் பேட்ரோல்' என்கிற சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது..
அதுமட்டுமல்ல, இதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் விதமாக நடிகை மஞ்சுவாரியரை வைத்து இரண்டு நிமிட வீடியோ காட்சிகளையும் இணையத்தில் ஏற்றியுள்ளது.. அந்த வீடியோவில், நள்ளிரவு நேரத்தில் ஆளில்லாத ரோட்டில் தன்னந்தனியாக நடந்து வருவது போல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப்படி இளம்பெண்கள் தனியாக வரவேண்டிய சூழல் இருந்தால், அல்லது விஷமிகள் தொல்லை ஏற்பட்டால், அல்லது கல்லூரி மாணவிகள் ஈவ் டீசிங்கிற்கு ஆளானால் என எந்த விதத்திலும் தங்களுக்கு பிரச்னை என தெரிந்தால் உடனே இந்த 'பிங்க் பேட்ரோலுக்கு போன் பண்ணினால் (1515) அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு மகளிர் போலீஸார் பறந்து வருவார்கள் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார் மஞ்சு வாரியர்.