கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்து டூட்டி பார்த்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது ஸ்பெஷல் டூட்டியில் தெலுங்கு திரையுலகிற்கும் டெபுடேஷன் டூட்டி பார்க்கிறார். இவரது சம்பளம் இப்போது ஒரு கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக தகவல்.. இன்று மகள் உயர்ந்திருக்கும் நிலையையும், சம்பாதிக்கும் வருமானத்தையும் பார்த்து அக மகிழ்ந்து போயிருக்கும் அவரது அம்மா மேனகா தான், ஒரு காலத்தில் கீர்த்தியை நடிக்க அனுப்பமாட்டேன் என தடை போட்டவர்.
அந்த தடையை நீக்குவதற்காகவும் சினிமாவில் நடிப்பதற்காகவும் கீர்த்தி என்ன பண்ணினார் தெரியுமா....? தினசரி தனது இஷ்ட தெய்வத்திற்கு தேங்காய் உடைக்க ஆரம்பித்தாராம்.. அதுமட்டுமல்ல தனது சகோதரியிடம் “இதே நான் இன்னொரு வீட்டில் பிறந்திருந்தால் இந்நேரம் என்னை நடிக்க உற்சாகப்படுத்தி இருப்பார்கள்.. இங்கே என்னடாவென்றால் சினிமா தொழில் இருக்கும் நம் பெற்றோரே வேண்டாம் என்கிறார்களே” என கண்ணை கசக்கியும் உள்ளார். இந்த விவரம் கீர்த்தியின் அப்பாவுக்கு தெரியவர இனியும் மகளின் ஆசைக்கு தடைபோட்டால் நன்றாக இருக்காது என பச்சைக்கொடி காட்டினாராம்.