ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. சமுதாயத்தை பற்றி கவலைப்படாமல் தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் படமாக எடுத்துவிட்டு, சென்சார் அதிகாரிகளிடம் என் படத்தை அனுமதித்தே ஆகவேண்டும் என மல்லுக்கு நிற்பார்கள்.. இயக்குனர் ஜெயன் செரியனும் இந்த லிஸ்ட்டில் இருப்பவர் தான்.. ஹோமோ செக்ஸ் விஷயத்தை மையப்படுத்தி 'க பாடிஸ்கேப்ஸ்' என்கிற படத்தை எடுத்துவிட்டு, கடந்த வருடம் அதை கேரள சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்.
படத்தை பார்த்த அதிகாரிகள் அந்தப்படத்திற்கு சான்றிதழே தரமுடியாது என கூறிவிட்டனர்.. அதன்பின் தமிழ்நாடு சென்சார், மும்பை ரிவைசிங் கமிட்டி என மற்ற இடங்களிலும் முட்டி மோதினார் ஜெயன் செரியன்.. எல்லா இடத்திலும் இதே ரிசல்ட் தான்.. உடனே கேரளா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.. நீதிமன்றமும் அவரது படத்திற்கு சான்றிதழ் அளிக்கும்படி அறிவுறுத்தியது..
ஆனால் நீதிமன்ற அறிவுரையை சென்சார் போர்டு ஏற்பதாக இல்லை.. சான்றிதழ் தரவும் முன்வரவில்லை.. 'அட ஏ' சர்டிபிகேட்டாவது கொடுங்கப்பா' என இயக்குனர் கெஞ்ச, “இந்த மாதிரி படமெல்லாம் வெளியே வரவே கூடாத படம்” என வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறது சென்சார் போர்டு.. சரி அப்படி என்னத்தைத்தான் அந்தப்படத்தில் எடுத்து வைத்துள்ளாராம் இயக்குனர் செரியன்..?
இந்தப்படத்தில் சில இந்துக்கடவுள்களையும் பெண்களையும் மோசமாக சித்தரித்துள்ளதால் தான் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டோம். இப்படிப்பட்ட படங்கள் வெளியாகாமல் இருப்பதே சமூகத்துக்கு நல்லது” என்கிறார்கள் சென்சார் அதிகாரிகள்..