‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ்த்திரையுலகில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் ஒரு சங்கம் உள்ளது. பாடலாசிரியர்களுக்கு தமிழமுதன் தலைமையில் தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கம் உருவாகி செயல்பட்டு வருகிறது. அதில் 200 இளம் பாடலாசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனபோதும், வைரமுத்து மாதிரி சீனியர் பாடலாசிரியர்கள் இந்த சங்கத்தில் இன்னும் இடம்பெறவில்லை. இதுகுறித்து தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தலைவர் தமிழமுதன் கூறுகையில்,
பாடலாசிரியர்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். உரிமைகளை கேட்பதற்கு ஒரு அமைப்பு வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் இந்த தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கம். இந்த சங்கம் இப்போது தான் வளர்ந்து வருகிறது. இப்ப வந்த பசங்க தானே என்னை பண்ணிடப்போறாங்க என்றொரு பார்வை உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஐந்து வருடம் இந்த சங்கத்தை சிறப்பாக நடத்திக்காட்டி விட வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம்.
வருடந்தோறும் சிறந்த பாடலாசிரியர்களுக்கு விருது அளித்து வரும் நிலையில், இந்த ஆண்டு விருதினை விருது தொகையோடு கொடுத்துள்ளோம். அதனால் இனிமேல் அந்த பார்வை மாறும். அடுத்ததாக கவிப்பேரரசு வைரமுத்துவையும் அழைத்து விருதையும், விருது தொகையும் கொடுத்து சிறப்பிக்கும் போதுதான் அவர் எங்களோடு இணைவார் என்று நம்புகிறோம். அந்த வகையில், அடுத்த வருடம் வைரமுத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க முடிவு செய்திருக்கிறோம். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் விருதை மு.மேத்தாவுக்கும், இளநிலை விருதினை விவேகாவிற்கும் வழங்கப்போகிறோம்.
இதில் எங்களுக்கு எந்த புகழும் தேவையில்லை. இதற்கு முன்பு யாரும் ஒருங்கிணைக்காத ஒரு விசயத்தை வளர்ந்து வரும் பாடலாசிரியர்கள் நாங்கள் இணைந்து செய்திருக்கிறோம். இப்போது நான் தலைவராக இருக்கிறேன். அண்ணன் வைரமுத்து தலைவராக வந்தால் நான் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு ஒருங்கிணைப்பாளராக இருப்பேன். அவர் மட்டுமில்லை எனக்கு முன்பு பாடல் எழுதிய எந்த சீனியர் வந்தாலும் விட்டுக்கொடுப்பேன். சிறந்த முன்னணி பாடலாசிரியர்கள் அனைவரும் இந்த சங்கத்தில் இணைவது தான் எங்களுக்கு கிடைக்கும் பெருமையாக கருதுகிறோம் என்கிறார் தமிழமுதன்.