சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதாரவியின் நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி, தேர்தலில் களமிறங்கிய விஷால் அதில் வெற்றி பெற்றார். அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திலும் முறைகேடு நடப்பதாக சொன்னார். குறிப்பாக, சிறிய பட்ஜெட் படங்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை. சில குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மட்டுமே தயாரிப்பாளர் சங்கத்தினால் பலன் கிடைத்து வருகிறது, அந்த நிலையை மாற்றப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு தற்போது தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவிக்கும் போட்டியிட களமிறங்கியுள்ளார் விஷால்.
அவருக்கு ஆதரவாக இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் வெளியூர்களில் உள்ள தயரிப்பாளர்களின் வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். அப்படி நேற்று கோவைக்கு சென்ற விஷால், கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயல்படவே இல்லை. ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களது சுய ஆதாயத்துக்காக சங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், சமீபகாலமாக படங்கள் சரியாக ஓடுவதில்லை. இதற்கு காரணம் திருட்டு விசிடி. அதனால் எங்கள் அணி தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்று நான் தலைவர் ஆனால், தயாரிப்பாளர் சங்கம் முழுமையாக செயல்படும். முக்கியமாக, திருட்டு விசிடியை ஒழிப்பதைத்தான் முதல் வேலையாக எடுத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.