ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரு பாகங்களாக உருவான பாகுபலி படத்தில் மட்டும் ஐந்து ஆண்டுகளாக நடித்த நாயகன் பிரபாஸ், தற்போது பாகுபலி-2 படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டார். பாகுபலி -2 படத்திற்கு பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்கும் ஆக்ஷ்ன் திரில்லர் படத்தில் பிரபாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து ஐந்து வருடங்களாக பாகுபலி படத்திற்கு உடல் எடையைக் கூட்டி குறைத்து போர் முறை பயிற்சி என கடுமையாக உழைத்த பிரபாஸ், தற்போது ஓய்வு எடுத்து வருகின்றார். மும்பை, ஐதராபாத் சென்னை, கேரளா என பல இடங்களில் பாகுபலி படக்குழுவினர் நிகழ்த்திய புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் பாகுபலி பட வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
அதே போல் இயக்குனர் ராஜமௌலி பாகுபலி-2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்த பின்னர் புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கவுள்ளார். பாகுபலி-2 பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பின்னர் இயக்குனர் சுஜீத் படத்தின் படப்பிடிப்புகளில் பிரபாஸ் கலந்து கொள்வார் என தெரிகிறது.
இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கும் நாயகிக்கான தேடலில் சுஜீத் ஈடுபட்டுள்ளார். பாலிவுட் நடிகைகள் பரிணீதி சோப்ரா, ஸ்ரதா கபூர் போன்ற நடிகைகள் இப்படத்தில் நடிக்கக் கூடும் என கூறப்பட்ட நிலையில் தற்போது கன்னட நடிகை ரக்ஷ்மிகா மண்டனாவும் இப்பட்டியலில் இணைந்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.