பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் முதல் அழகு நடிகை, கனவு கன்னி என்று டி.ஆர்.ராஜகுமாரியை குறிப்பிடுவார்கள். ஆனால் முதல் கவர்ச்சி நடிகை என்றால் அது தவமணி தேவிதான்.
பட அதிபரும், இயக்குனருமான டி.ஆர்.சுந்தரம் தனது முதல் தயாரிப்பான சதி அகல்யா என்ற படத்தை பற்றி பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது என் படத்தில் நடிக்கும் ஹீரோயின் இவர் தான் என்று ஒரு படத்தை பத்திரிக்கையாளர்களிடம் கொடுத்தார். அந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியில உறைந்து நின்றார்கள். அந்தப் படத்தில் தவமணி தேவி நீச்சல் உடையில் இருந்தார். சதி அகல்யா படத்தில், தவமணி தேவி ஆடல் பாடலுடன் கவர்ச்சியாகவும் நடித்தார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த தவமணி தேவி, ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த 1930களில் தமிழ் சினிமாவுக்கு வந்தார். முறைப்படி பரநாட்டியம், சங்கீதம் கற்றிருந்தார். அந்தக் காலத்திலேயே குட்டை பாவடை டிசர்ட்டுடன் வெளி உலகில் வலம் வந்த துணிச்சலான நடிகை.
அடுத்த நடித்த வனமோகினி படத்தில் காட்டுவாசி பெண் வேடத்தில் கவர்ச்சியாக நடித்தார். இது ஆங்கில படத்தின் ரீமேக். மூலப் படத்தில் ஹாலிவுட் நடிகை நடித்த அதே மாதிரி உடை அணிந்து நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வித்யாபதி என்ற படத்தில் தேவதாசி கேரக்டரில் நடித்து அனைவரையும் ஆச்சயர்ப்பட வைத்தார். வேலைக்காரி மாதிரியா குடும்ப படங்களிலும் தனது நடிப்பை நிரூபித்தார். ராஜகுமாரி படத்தில் இளவரசி வேடத்தில் கலக்கினார். இப்படி அந்தக் கால இளைஞர்களை தன் நடிப்பால், அழகால், கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் தவமணி. சிங்களத்து குயில் என்று அழைக்கப்பட்டார். தவமணி தேவியை வாழ்நாளில் ஒரு முறையாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்பதே அன்றை இளைஞர்களின் லட்சியமாக இருந்தது.