டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம்கோபால் வர்மா, சமூக வலைதளங்களில், எக்குத் தப்பாக பேசி, வாங்கி கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படித் தான், சமீபத்தில், மகளிர் தினத்தன்று, நடிகை சன்னி லியோனை பற்றி, ஆபாசமாக கருத்தை தெரிவித்தார். இதற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு தரப்பினரும், ராம் கோபால் வர்மாவை கண்டித்தனர். ஆனால், சன்னி லியோனோ, அமைதியாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு பின், 'என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். இது போன்ற பிரச்னைகள் வரும் போது, அனைவரும் ஒரே குரலில், அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்' என, டுவிட்டரில் தெரிவித்தார். இதைப் படித்த பலரும், 'அடேங்கப்பா; அதிரடியான பெண்ணுக்குள், இப்படி ஒரு அமைதியான குணமா' என, ஆச்சரியப்பட்டனர்.