டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நான்கு படங்களில் நடித்ததுபோல, மேஜர் மகாதேவன் கேரக்டரில் மோகன்லால் நான்கு படங்களில் நடித்துபோல் இவர்களுக்கு சமமமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆக மாறவிருக்கிறார் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபி. ஆம், சுரேஷ்கோபிக்கும் இப்படி ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. 1994ல் சுரேஷ்கோபி நடிப்பில் 'கமிஷனர்' என்கிற படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ரெஞ்சி பணிக்கர் கதை எழுத ஷாஜி கைலாஷ் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்..
கமிஷனர் படத்தில் சுரேஷ்கோபி ஏற்றிருந்த 'பரத் சந்திரன் ஐ.பி.எஸ்' கேரக்டர் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றுவிட, 11 வருடங்கள் கழித்து அதாவது 2005ல் அந்த கேரக்டர் பெயரிலேயே அதன் இரண்டாம் பாகமாக 'பரத் சந்திரன் ஐ..பி.எஸ்' படம் வெளியானது. அதுவும் சூப்பர் ஹிட், இதன் கதையை எழுதியதோடு ரெஞ்சி பணிக்கரே படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார். அதன்பின் மூன்றாவது முறையாக இந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க நினைத்த ரெஞ்சி பணிக்கரும் ஷாஜி கைலாஷும் ஒரு வித்தியாசமான முயற்சியை செய்தார்கள்..
அதாவது ஏற்கனவே மம்முட்டி நடிப்பில் ஹிட்டான 'தி கிங்' மற்றும் சுரேஷ்கோபியின் 'பரத் சந்திரன் ஐ.பி.எஸ்' ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் இணைத்து 'தி கிங் அன்ட் கமிஷனர்' என்கிற பெயரில் 2012ல் படமாக எடுத்தனர். ஆனால் முந்தைய இரண்டு பாகங்களைப்போல இதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் இப்போது நான்காம் முறையாக பரத் சந்திரன் ஐ.பி.எஸ்., கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளாராம் கதாசிரியர் ரெஞ்சி பணிக்கர். அரசியலில் பிசியாக இருக்கும் சுரேஷ் கோபியும் கூட இதற்கு சம்மதம் தந்துவிட்டாராம்.