பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தன்னுடைய மானேஜர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் சொந்தப்பட நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் போடப்பட்டுள்ள குடிசை வீடுகள் செட்டில் கடந்த சில வாரங்களாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
வேலைக்காரன் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு யாரும் சென்றுவிடாதபடி, சுமார் 20க்கும் மேற்பட்ட ஜிம்பாய்ஸ் என்கிற அடியாட்களை பாதுகாப்புக்காக நிறுத்தி இருக்கிறார்கள். அந்த அடியாட்கள் பண்ணுகிற அழிச்சாட்டியங்களால் எரிச்சலாகிக்கிடன்றினர் படத்துறையினர். வேலைக்காரன் படப்பிடிப்பில் இருந்த பிரகாஷ்ராஜை பார்க்க அவருடைய மானேஜர் சென்றபோது, அவரை உள்ளே விட மறுத்துவிட்டனர். பிரகாஷ்ராஜ் மானேஜர் என்று சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வேலைக்காரன் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா போன் செய்து, உள்ளே அனுப்பச் சொன்னால்தான் அனுமதிப்போம் என்று தகராறு செய்துள்ளனர்.
அதேபோல், வேலைக்காரன் செட் போடப்பட்டுள்ள பிரசாத் லேபின் மானேஜர், வழக்கமாக மாலைநேரத்தில் அந்த வளாகத்தை சுற்றி ரவுண்ட்ஸ் வருவார். அப்படி வந்தபோது அவரையும் உள்ளே விடாமல் தடுத்திருக்கிறார்கள் சிவகார்த்திகேயனின் அடியாட்கள். அதன் பிறகு அவர் யார் என்று தெரிந்து அனுமதித்துள்ளனர். இந்தளவுக்கு கெடுபிடி பண்ணுமளவுக்கு அங்கே போடப்பட்டுள்ள செட் ஒன்றும் எந்தப்படத்திலும் இடம்பெற்றிராத புதுமையான செட் இல்லை.
வீ.சேகரின் படங்களில் இடம்பெறும் குடிசை வீடுகள் உள்ள சாதாரண செட்தான். இதை எதற்காக யாரும் பார்க்கக் கூடாது என்று அடியாட்களை நிறுத்தி வைத்து தடுக்க வேண்டும்? அடியாட்களை நிறுத்தி வைத்திருப்பது, வேலைக்காரன் செட்டை பாதுகாக்க அல்லவாம், அங்கே நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை தன்னை மீறி யாரும் சந்தித்துவிடக் கூடாது என்று நினைக்கிறாராம் வேலைக்காரன் படத்தின் தயாரிப்பாளர்.
தனக்கு தெரியாமல் கதை சொல்ல வேண்டும் என்று இயக்குநர்களோ... கால்ஷீட் வேண்டும் என்று தயாரிப்பாளர்களோ..... அல்லது சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே நெருக்கமாக இருந்த எஸ்கேப் மதன், பாண்டிராஜ் போன்றவர்கள் சிவகார்த்திகேயனை நேரடியாக சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே சிவகார்த்திகேயனை சுற்றி இப்படி ஒரு பாதுகாப்பு அரண் போடப்பாட்டிருப்பதாக திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.
சிவகார்த்திகேயன் யாரை சந்திக்க வேண்டும்? யாரை சந்திக்கக் கூடாது என்பதை ஆர்.டி.ராஜாதான் தீர்மானிப்பதாக திரையுலகில் சொல்லப்பட்டு வருகிறது. வேலைக்காரன் செட்டில் நடக்கும் சம்பவங்கள் அதை உண்மையாக்குவது போல் இருக்கின்றன.
சூரிய வெளிச்சத்தை கைக்குட்டையால் மறைத்துவிட முடியுமா?