மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கஞ்சே, கௌதமிபுத்ர சடர்கனி போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் இதில் கஞ்சே படத்திற்கு சிறந்த பிராந்திய படத்திற்கான தேசிய விருதையும் பெற்று தந்தவர். இந்நிலையில் இயக்குனர் க்ரிஷ் மெகா ஸ்டார் சிரஞ்சீவியைச் சந்தித்து தான் தயார் செய்துள்ள கதையைக் கூறியுள்ளார். கதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிரஞ்சீவி மேலும் சில மாற்றங்களுடன் முழுதிரைக்கதை அமைத்து தன்னை அணுகும்படி க்ரிஷிடம் கூறியுள்ளாராம். இதனால் உற்சாகமடைந்த க்ரிஷ், திரைக்கதை அமைக்கும் பணிகளை தற்போதே துவங்கி விட்டார். தனது 150 திரைப்படமாக கைதி நம்பர் 150 படத்தில் நடித்த சிரஞ்சீவி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.