பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சந்தானம் ஹீரோ அவதாரமெடுத்த முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கோலிவுட் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்தபோது, காமெடியன் என்பதால் தயக்கம் காட்டினர். அதனால் புனேயில் இருந்து ஆஷ்னா சவேரியை அழைத்து வந்தனர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என்ற இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தார். பின்னர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி, தற்போது ஆரி நடிக்கும் நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கோலிவுட்டில் மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார் அவர். அதோடு சந்தானமும் தற்போது முன்னணி ஹீரோ பட்டியலில் இணையும் தருவாயில் இருப்பதால் அவருடன் மீண்டும் நடிப்பதற்காக நட்புரீதியில் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளார் ஆஷ்னா சாவேரி. ஆனால், சந்தானத்துடன் முதல் இரண்டு படங்களில் நாயகியாக நடித்தபோது அவருடன் கிசுகிசுக்கப்பட்டவர் ஆஷ்னா என்பதால், சந்தானம் தரப்பில் இருந்து இன்னமும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லையாம். இருப்பினும், எனக்கு ஆதரவு கொடுத்தே ஆக வேண்டும் என்று சந்தானத்திடம் தொடர்ந்து அன்புத்தொல்லை செய்து வருகிறார் ஆஷ்னா சாவேரி.