தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகில் இப்போது யார் நம்பர் 1 நடிகை என்று கேட்டால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நல்ல கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகை நம்பர்-1 ஆ, அல்லது அதிக சம்பளம் வாங்கும் நடிகை நம்பர் 1-ஆ, என்று கேட்டால் அதிக சம்பளம் வாங்கும் நடிகைதான் நம்பர் 1 என்று சொல்வார்கள்.
அப்படிப் பார்த்தால் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராதான் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். சுமார் 3 கோடி ரூபாய் வரை நயன்தாரா சம்பளம் வாங்குகிறார் என்று ஒரு தகவல் உள்ளது. அவருக்கு அடுத்து சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் 2 கோடி வரையும், ஸ்ருதிஹாசன் 1 கோடி வரையும் வாங்குகிறார் என்கிறார்கள். தமிழில் அவ்வளவு சம்பளம் தருகிறார்களோ இல்லையோ தெலுங்கில் தருகிறார்கள். நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிப்பதை விட தமிழ்ப் படங்களில்தான் அதிகம் நடிக்கிறார். அவர் கைவசம் தற்போது எந்தத் தெலுங்குப் படமும் இல்லை.
இப்போது 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்துவிட்டார் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான பெல்லம் கொண்டா சுரேஷ், அவர் மகன் சாய் ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கும் படங்களில் முன்னணி நடிகைகளை அதிக சம்பளம் கொடுத்தே நடிக்க வைப்பார். இதற்கு முன் சமந்தா, தற்போது ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு 1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தார். அடுத்த படத்தில் அவர் மகன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியிருக்கிறார். தேதிகள் இல்லாததால் அந்தப் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார். ஆனால், சுரேஷ் 1 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னதும் கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதித்துவிட்டாராம். இதுதான் டோலிவுட்டின் தற்போதைய சூடான சம்பளச் செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது.