பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோயிலிலே, சின்னவர், அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலானவர், அவ்வப்போது இந்தியா வந்து செல்வார். இந்நிலையில், சினிமா வாய்ப்புக்காக நடிகையர் அனுசரித்து போக வேண்டும் என்று கஸ்தூரி கூறியதாக செய்தி வெளியானது. ஆனால் தான் அப்படியொரு செய்தியை சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மிகவும் காட்டமாக வீடியோ வடிவில் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார் கஸ்தூரி. அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛கடந்த இரண்டு நாட்களாக செய்தி தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான ஒரு செய்தியை நான் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக இணையதளம் முழுக்க பரப்பிவிட்டுள்ளனர். பொதுவாக நான் இதுபோன்ற ஒரு கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவையாவும் என்னை பற்றிய வதந்திகளாக இருக்கும். ஆனால் இப்போது இந்த செய்தி, என்னுடைய குடும்பத்தையும் பாதித்துள்ளது. நான் குடும்பம் என்று சொல்வது என் திரையுலகத்தை தான். நாங்கள் ஒழுக்கமானவர்கள், நல்லவர்கள், எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது என ஒவ்வொருவரிடமும் சர்டிபிகேட் வாங்க வேண்டிய அவசியம் சினிமாக்காரர்களுக்கு இல்லை. அதற்காக யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அதை பொறுத்து கொள்ள வேண்டும் என்பது நியாயமில்லை.
இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.