பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து இயக்கியுள்ள படம் - 'கடுகு'. தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் பரத், வில்லனாக நடித்துள்ளார். விஜய்மில்டனின் தம்பியும் கடுகு படத்தின் தயாரிப்பாளருமான பரத்சீனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் சூர்யா தன்னுடைய '2D எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுக்க வெளியிட முன்வந்தார். ஜோதிகா நடித்த '36 வயதினிலே', பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க-2',விக்ரம்குமார் இயக்கிய 24 ஆகிய படங்களை தயாரித்த '2D' நிறுவனம் தற்போது ஜோதிகா நடிக்கும் 'மகளிர் மட்டும்' படத்தை தயாரித்து வருகிறது.
மகளிர் மட்டும் படத்தை வெளியிட்டுவிட்டு கடுகு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார் சூர்யா. மகளிர் மட்டும் வேலைகள் திட்டமிட்டபடி முடியாத காரணத்தினால், மகளிர் மட்டும் படத்துக்கு முன்னதாக கடுகு படத்தை திரைக்குக் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் வருகிற 24 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.
இதனை அதிகார்பூர்வமாக '2D' நிறுவனம் அறிவித்துள்ளது. கடுகு படத்தை தொடர்ந்து வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் தரமான படங்களை வாங்கி வெளியிடவும் முடிவு செய்துள்ளது '2D எண்டர்டெயின்மெண்ட்' .