தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் திரைப்படமாகிறது. புகழின் உச்சிக்கு சென்று வறுமையில் வீழ்ந்து மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை பல பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்க வேண்டி அளவிற்கு விஷயங்கள் கொண்டது. தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் சாவித்ரி வாழ்க்கையை படமாக இயக்குகிறார்.
சாவித்திரியாக நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். சிலர் அணுகப்பட்டனர். பலரும் மறுத்துவிட்ட நிலையில் இறுதியில் கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொண்டார். தற்போது அவர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதுடன் அவரது படங்களை பார்த்து சாவித்ரியின் மேனரிசத்தை கற்று வருகிறார்.
மகாநதி பட விளம்பரங்களில் சமந்தா படமும் இடம்பெற்றிருப்பது பலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. பட தயாரிப்பு தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, "சாவித்ரி சினிமாவில் பிசியாக இருந்தபோது அவருக்கு போட்டியாக இருந்தவர் நடிகை ஜமுனா. இருவருக்குள்ளும் நட்பும் இருந்தது, போட்டியும் இருந்தது. அதனால் சமந்தா நடிப்பது ஜமுனா கேரக்டரில்தான். ஆனால் படம் முழுக்க வரமாட்டார்" என்று ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
அதேசமயம், "சாவித்திரி புகழின் உச்சியில் இருந்தபோது புதிய வரவாய் வந்து அவரது மார்க்கெட்டை காலி பண்ணியவர் சரோஜாதேவி. அவரது கேரக்டரில்தான் சமந்தா நடிக்கிறார்" என்று கூறுகிறார்கள். எனவே சமந்தா நடிப்பது ஜமுனா, அல்லது சரோஜாதேவி கேரக்டரில்தான் என்கிறார்கள். இந்த படம் ஒரு நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. அந்த நாவலில் அதிகம் இடம்பிடித்திருப்பது ஜமுனாதான் என்பது குறிப்பிடத்தக்கது.