வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சமீபத்தில் வெளிவந்த படம் நிசப்தம். மிராக்கிள் பிலிம்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்ஸி தயாரித்திருந்தார். மைக்கேல் அருண் இயக்கி இருந்தார். இந்தப் படம் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறை பற்றிய படம். தற்போது இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர் ஏஞ்சலின் குழந்தைகளுக்கு இலசவமாக திரையிட்டுக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அதன்படி, சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் படம் குழந்கைளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. பின்னர் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதம் பவுண்டேஷன் அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
படம் முடிந்து வெளியில் வந்ததும், குழந்தைகள் ஒரு படம் பார்த்த மகிழ்சியில் வந்தார்கள். பெற்றவர்கள் கண்ணீருடன் வந்தார்கள். நிகழ்ச்சியில் நாரோ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நாசர், முதன்மை செயல் இயக்குநர் பிரபாலா சுபாஷ், பேபி சைதன்யா, நடிகர் அஜய், இயக்குநர் மைக்கேல் அருண், தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.