இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி-2' ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் தமிழக விநியோக உரிமையை சில மாதங்களுக்கு முன்னதாக 'ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்' பெரிய விலை கொடுத்து வாங்கியது.
இந்நிலையில், இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு தற்போது மிகப் பெரிய ஒரு தொகைக்கு விற்றுள்ளது ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ். பாகுபலி முதல் பாகத்தை வாங்கிய ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா கடைசி நேரத்தில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனத்துக்கு விற்றார். 'பாகுபலி' முதல் பாகத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டு வசூல் அள்ளியது 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்'.
தற்போது 'பாகுபலி-2' படத்தையும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' வெளியிடவிருக்கிறது. அதைப்போல 'பாகுபலி-2' படத்தின் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை 'ஃபைவ் ஸ்டார்' நிறுவனத்தை சேர்ந்த செந்திலுக்கு விற்கப்பட்டிருக்கிறது.