'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி-2' ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் தமிழக விநியோக உரிமையை சில மாதங்களுக்கு முன்னதாக 'ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்' பெரிய விலை கொடுத்து வாங்கியது.
இந்நிலையில், இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு தற்போது மிகப் பெரிய ஒரு தொகைக்கு விற்றுள்ளது ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ். பாகுபலி முதல் பாகத்தை வாங்கிய ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா கடைசி நேரத்தில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனத்துக்கு விற்றார். 'பாகுபலி' முதல் பாகத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டு வசூல் அள்ளியது 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்'.
தற்போது 'பாகுபலி-2' படத்தையும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' வெளியிடவிருக்கிறது. அதைப்போல 'பாகுபலி-2' படத்தின் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை 'ஃபைவ் ஸ்டார்' நிறுவனத்தை சேர்ந்த செந்திலுக்கு விற்கப்பட்டிருக்கிறது.