தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி-2' ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் தமிழக விநியோக உரிமையை சில மாதங்களுக்கு முன்னதாக 'ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்' பெரிய விலை கொடுத்து வாங்கியது.
இந்நிலையில், இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு தற்போது மிகப் பெரிய ஒரு தொகைக்கு விற்றுள்ளது ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ். பாகுபலி முதல் பாகத்தை வாங்கிய ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா கடைசி நேரத்தில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனத்துக்கு விற்றார். 'பாகுபலி' முதல் பாகத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டு வசூல் அள்ளியது 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்'.
தற்போது 'பாகுபலி-2' படத்தையும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' வெளியிடவிருக்கிறது. அதைப்போல 'பாகுபலி-2' படத்தின் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை 'ஃபைவ் ஸ்டார்' நிறுவனத்தை சேர்ந்த செந்திலுக்கு விற்கப்பட்டிருக்கிறது.