நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்பை பொறுத்தவரை கிறிஸ்துமஸ் பண்டிகை, சித்திரை விஷு இரண்டுமே அவருக்கு தனது படங்களை ரிலீஸ் செய்ய ராசியான சீசன்கள்.. அந்தவகையில் கடந்த 2015 கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியான '2 கண்ட்ரீஸ்' மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'கிங் லையர்' (ஏப்-2) ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்.. அதனால் தான் தற்போது தான் நடித்துள்ள 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படத்தை சித்திரை விஷு கொண்டாட்டமாக, அதேசமயம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மார்ச்-30ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்..
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் எழுந்தது.. ஆம்.. மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' படம் வரும் மார்ச்-30ஆம் தேதி வெளியாகிறது. அதை தொடர்ந்து அடுத்த வாரம், அதாவது ஏப்-7ஆம் தேதி மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படம் தியேட்டர்களில் சீட் போட்டுவிட்டது.. இரண்டுமே எதிர்பார்ப்புள்ள படங்கள் என்பதால் அந்த படங்களுடன் இணைத்து தனது படத்தை வெளியிட்டால் நிச்சயம் வசூலில் அடிவாங்கும் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து ஏப்-1ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறார். அதற்குள் மம்முட்டியின் படம் இரண்டுநாள் ஓடிவிடும் என்பதால் கொஞ்சம் ரிலாக்சாக இருக்கலாம் என்பது திலீப்பின் திட்டம். முட்டாள்களின் தினமான ஏப்-1ல் படத்தை ரிலீஸ் செய்யும் திலீப்பின் முடிவு புத்திசாலித்தனமானது என்றே விநியோகஸ்தர்கள் பேசிக்கொள்கிறார்களாம்.