ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கழுகு, சவாலே சமாளி, சிவப்பு ஆகிய படங்களை இயக்கியவர் சத்யசிவா. தற்போது தெலுங்கு நடிகர் ராணா நடிப்பில் மடை திறந்து என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிப்படமாக உருவாகிறது. பாகுபலிக்குப்பிறகு ராணா நடிப்பில் வெளியான காஸி படம் தமிழ்நாட்டில் நல்ல வசூல் சாதனை புரிந்ததோடு, விரைவில் பாகுபலி-2வும் வெளியாகயிருப்பதால், இந்த படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் தானும் மார்க் கெட்டை பிடித்து விடலாம் என்று உறுதியாக நம்புகிறார் ராணா.
மேலும், தனது படங்கள் ஒவ்வொன்றிலுமே ஒரு அழுத்தமான விசயத்தை பதிவு செய்யும் சத்யசிவா, இந்த மடைதிறந்து படத்தை சுதந்திரப் போராட்டம் நடை பெற்ற காலகட்டத்துக்கதையில் உருவாக்கி வருகிறார். குறிப்பாக, சுபாஷ் சந்திர போஸ் காலத்தில் நடந்த சில முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்தான் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம். அதனால் அந்த காலகட்டத்துக்கே சென்று இயல்பாக நடித்து வரும் ராணா, பாகுபலிக்காக தனது உடல்கட்டை மாற்றியது போன்று இந்த பீரியட் பிலிமுக்காக சில மாதங்கள் ஜிம்முக்கு சென்று பாடிலாங்குவேஜை புதிய வடிவத்துக்கு மாற்றி நடித்து வருகிறாராம்.