இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மலையாள சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரான தீபன் இன்று காலமானார். கிட்னி சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கின்றது. 47 வயதிலேயே இவர் மரணத்தை தழுவியது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது முதல் படமான 'லீடர்' தோல்வி அடைந்தாலும் கூட, அடுத்தடுத்து பிருத்விராஜை கதாநாயகனாக வைத்து 'புதியமுகம்' மற்றும் 'ஹீரோ' என இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததால் மலையாள திரையுலகில் நன்கு பாப்புலரான இயக்குனரானார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கோபி நடித்த 'டால்பின்ஸ் பார்' என்ற படத்தை இயக்கினார். ஆனால் படம் தோல்வியே கண்டது. அதன்பின் கடந்த வருடம் இவரை அழைத்த ஜெயராம் தான் நடிக்கும் 'சத்யா' என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார்.. ஆக்சன் படமாக, ஹிட்டாகும் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் இயக்குனர் தீபன் காலமானது படக்குழுவினரையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.