'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இதுநாள் வரை மும்பை ஏரியாவை விட்டு வைத்திருந்த அல்லது கண்டுகொள்ளாமல் விட்டிருந்த மோகன்லால் கடந்த ஆறு மாத அளவில் மும்பை தியேட்டர்களையும் மும்பை விநியோகஸ்தர்களையும் அவ்வளவு ஏன் பாலிவுட் சூப்பர் நடிகர்களையுமே அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் நிலைகுலைய வைத்திருக்கிறார்... ஆம். கடந்த செப்டம்பர் முதல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான மூன்று படங்களும் மும்பையில் அதே தேதிகளில் வெளியாகி 50 நாட்களை கடந்து ஒடி ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கின்றன.
'ஒப்பம்', 'புலி முருகன்' மற்றும் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் என மோகன்லாலின் மூன்று படங்களும் மூன்றுவிதமான தளத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்றாலும் மூன்றுக்குமே மும்பை மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதுதான் ஆச்சர்யம்.. சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ராயீஸ், ஹ்ரித்திக் ரோஷனின் 'காபில்' மற்றும் அக்சய்குமாரின் 'ஜாலி எல்எல்பி-2' ஆகியவை நாற்பது நாட்களை தாண்டுவதற்கே தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருக்கும் சூழலில் மோகன்லாலின் இந்த ஹாட்ரிக் சாதனை அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.