ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் பிருத்விராஜை வைத்து ‛புதிய முகம் என்ற படத்தை இயக்கிய, இயக்குநர் தீபன் காலமானார், ஆனால் இறந்தது நடிகை ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் என தவறாக செய்தி பரவிவிட்டது. அது ஏன்.? என்று இனி பார்ப்போம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரேவதி. இவரது கணவர் சுரேஷ் மேனன். ஏராளமான குறும்படங்களை இயக்கியவர், ரேவதியை வைத்து ‛புதிய முகம் என்ற படத்தை இயக்கி, அதில் தானே ஹீரோவாகவும் நடித்தார். தொடர்ந்து பாசமலர்கள் என்ற படத்தை இயக்கினார். ஆனால் புதியமுகம் வெற்றி பெற்ற அளவுக்கு பாசமலர்கள் படம் வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் சுரேஷ் மேனனுக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
1986-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரேவதி-சுரேஷ் மேனன் தம்பதியர், 16 ஆண்டு காலம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இவர்களது வாழ்வில் மனகசப்பு ஏற்பட இருவரும் 2002-ம் ஆண்டு பிரிந்தனர். தொடர்ந்து 2013ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த சுரேஷ் மேனன், சமீபத்தில் ஜிவி பிரகாஷ் குமாரின் 4ஜி படத்திலும், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் பிருத்விராஜ்வை வைத்து ‛புதிய முகம் என்ற படத்தை இயக்கியிருந்தார் தீபன். தொடர்ந்து சுரேஷ் கோபியை வைத்து டால்பின் என்ற படத்தை இயக்கினார். சிறுநீரக பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
புதிய முகம் பட இயக்குநர் மரணம் என்ற செய்தி வெளியானதும், அது நடிகை ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் என தவறுதலாக செய்தி வெளியாகிவிட்டது. ஏனென்றால் தமிழில் அவர் புதிய முகம் என்ற படத்தை இயக்கினார். பின்னர் இதுப்பற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் அது தவறான செய்தி என்றும், அவர் தற்போது சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிப்பதும் தெரியவந்தது.
இதனிடைய சுரேஷ் மேனனின் காதுக்கும் இந்த செய்தி வந்தபோது, நான் சாகவில்லை, நிம்மதியாக காபி குடித்து கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.