தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம்ரவி-நயன்தாரா நடித்த தனிஒருவன் படத்தை போலீஸ் கதையில் இயக்கிய மோகன்ராஜா, அதையடுத்து சிவகார்த்திகேயன்-நயன்தாராவை இணைத்து இயக்கி வரும் வேலைக்காரன் படத்தையும் போலீஸ் கதையில் இயக்கி வருவதாகவும், காக்கி சட்டை படத்தை விட அதிரடியான போலீசாக சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், வேலைக் காரனில் இதுவரை ஒரு காட்சியில்கூட சிவகார்த்திகேயன் போலீஸ் டிரஸ் அணிந்து நடித்த காட்சி படமாக்கப்படவில்லை என்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒருமாத காலமாக சென்னை பிரசாத் லேப்பில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது. இந்த செட்டில் சிவகார்த்திகேயன் எந்தமாதிரியான கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்று விசாரித்தபோது, இந்த செட்டிற்குள் ஒரு மில் தொழிலாளியாக அவர் நடித்து வருவதாக சொல் கிறார்கள். அந்த வகையில், மில் தொழிலாளிகளுக்கும், முதலாளிக்குமிடையே நடக்கும் பிரச்சினைகளும் படமாக்கப்படுகிறதாம். அந்த வகையில், சாதாரண பேண்ட், ஒரு காக்கி சட்டை அணிந்து மில் தொழிலாளியாக அவர் நடிக்கிறாராம்.
குறிப்பாக, மன்னன் படத்தில் ரஜினி நடித்தது போன்று இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் மில் தொழிலாளியாக நடிக்கிறாராம். அதனால்தான் படத்திற்கு வேலைக்காரன் என்று பெயர் வைத்துள்ளாராம் மோகன்ராஜா.