துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
மாணவர்கள் ஆரம்பித்து வைத்த எழுச்சி போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு புதிய உத்வேகம் பிறந்துள்ளது. அதுவும் திரைப்பிரபலங்களிடம் குறிப்பாக நடிகர் கமல்ஹாசனிடம் புதிய உத்வேகம் பிறந்துள்ளது என்றே தான் சொல்லணும். ஜல்லிக்கட்டு மட்டுமல்ல அதன்பின்னர் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றத்தின்போது கூட கமல் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கமலிடம் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர் அரசியலுக்கு வருவற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதை கமல் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் தனியார் டிவி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அவர் பேசியதாவது...
விஸ்வரூபம் படத்திற்கு எழுந்த பிரச்னைக்கு இஸ்லாமியர்கள் காரணம் அல்ல. அரசியல்வாதிகள் தான் முழுக்க முழுக்க காரணம். எனது படத்தை வெளியிட விடாமல் தடுத்ததே அப்போதைய ஆட்சியில் இருந்தவர்கள் தான். பகுத்தறிவு வாதத்தை பேசிக் கொண்டே தான் இருப்பேன்.
நிகழ்கால அரசியலில் தீங்கு ஏற்படுமானால் நிச்சயம் குரல் கொடுப்பேன். வெறும் கலைஞனாக மட்டும் என்னால் இருக்க முடியாது. நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன். என் வாழ்க்கையில் எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்கவில்லை. ஓட்டுகளை விலை பேசினால் கேள்வி கேட்க முடியாது. எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்க வேண்டும்.
ஜெ., மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஜெயலலிதா வௌிப்படையாக இருந்ததில்லை, ஒருவேளை அவரது சிகிச்சை தொடர்பான் சந்தேகத்திற்கு அதுவும் காரணம் என நினைக்கிறேன்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும், மேலும் நான்கு ஆண்டுகள் ஆட்சி தொடர வேண்டும் என்று யாரும் சொல்ல தேவையில்லை. அப்படி சொல்வது கட்டாய திருமணம் போன்றது. யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது முதல் தகுதி. சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் கம்யூனிஸ்ட்வாதி என்று நினைக்க வேண்டாம். முதல்வர், பிரதமர் உள்ளிட்ட அனைவரும் மக்களுக்கு சேவை செய்யும் கருவி. என்னை அரசியல் கட்சிக்குள் கொண்டு வர நீண்டகாலமாகவே முயற்சிகள் நடக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு எரிமலையின் நுனி. பல்வேறு கோபங்களின் வெளிப்பாடு தான் ஜல்லிக்கட்டு போராட்டம். தவறுகள் அதிகமாகும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் மாற வேண்டும். பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.
திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்துவிட்டதாக சொல்ல முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிடம் என்ற சொல்லும் ஒலிக்கும். திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதை யாரும் மறுக்க முடியாது. தேசிய கட்சிகள் தமிழகத்திற்குள் நுழைந்தால் திராவிடத்தை நிச்சயம் ஏற்க தான் வேண்டும்.
ஒருமுக கலாச்சாரத்தை இந்தியாவில் புகுத்த முடியாது. பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறார்கள், இது இன்று நேற்று அல்ல காலம் காலமாய் தொடருகிறது.
பொறுக்கி என்று கூறிய சுப்ரமணியசாமியின் கருத்து தவறானது. என்னுடைய குரல் ஒலித்து கொண்டே இருக்கும், அமைதிப்படுத்தலாமே தவிர யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது.