தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம், இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் திரைப்படம் என இரு வேறு படங்களில் நாகசைதன்யா பிசியாகவுள்ளார். இதில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் நாககசைதன்யாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபதி நடிக்கும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. ஐதரபாத்தை கதைக்களமாக கொண்டு நகரும் இப்படத்தை தயாரிப்பாளர் சாய் கொரபாடி தயாரிக்கின்றார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தின் புறநகர் பகுதிகளில் நடைபெறும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்லிசூப்புலு படப்புகழ் இசையமைப்பாளர் விவேக் சாகர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இப்படத்துடன் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தின் படப்பிடிப்புகளிலும் நாகசைதன்யா கலந்து கொண்டுவருகின்றார். அப்படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார்.