பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை டாப்சி, கடந்த சில நாட்களாக தனது அடுத்த படமான நாம் சபானா படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். ஷிவம் நாயர் இயக்கும் இப்படம் மார்ச் 31 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் டாப்சி, ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இவரின் சண்டைக் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வந்துள்ளதாக படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டாப்சி, தனது நிஜ வாழ்க்கையில் தான் மிகவும் அமைதியாக ஆள் என தெரிவித்தார். அவர் பேசுகையில், நிஜ வாழ்க்கையில் இதுவரை நான் யாரையும் அடித்தது கூட கிடையாது. நான் பள்ளி நாட்களில் விளையாட்டு வீராங்கனை என்பதால் மிகவும் துறுதுறுவென இருப்பேன். இருந்தும் நான் கோபப்பட்டதோ, அடித்ததோ கிடையாது என்றார்.