டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் ராஜீவ்மேனன் இயக்கிய படம் மின்சார கனவு. 22 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் அரவிந்த்சாமி-பிரபுதேவா நாயகர்களாக நடிக்க, இந்தி நடிகை காஜோல் நாயகியாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானபோதும் அதன்பிறகு தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை காஜோல். இந்நிலையில், தற்போது செளந்தர்யா ரஜினி இயக்கி வரும் விஐபி-2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி படத்தின் தொடர்ச்சியான இந்த படத்திலும் தனுசுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த அமலாபாலே நடிக்க, அப்பா-அம்மாவாக சமுத்திரகனி, சரண்யா நடித்துள்ளனர். இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காஜோல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு அவர் விடைபெற்று விட்டதாக செளந்தர்யா ரஜினி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் காஜோல் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாக மட்டுமே செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அதுபற்றி விசாரித்தால், நெகடீவ் கலந்த ஒரு ரோலில் அவர் நடித்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது. அந்தவகையில், விஐபி-2 படத்தின் வில்லியாக காஜோல் நடித்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.