மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஒரு வடக்கன் செல்பி படத்தில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அந்த படத்தைப்பார்த்து மஞ்சிமாவின் நடிப்பில் அசந்து போன கெளதம்மேனன், தனது அச்சம் என்பது மடமையடா படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா, தற்போது உதயநிதியுடன் இப்படை வெல்லும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மஞ்சிமா மோகனுக்கு 24-வது பிறந்த நாள் ஆகும். அதனால் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு இன்னொரு மகிழ்ச்சியும் இந்த பிறந்த நாளில் கிடைத்துள்ளது. அதாவது, அச்சம் என்பது மடமையடா படத்தில் தமிழில் அறிமுகமான அவருக்கு, சிறந்த அறிமுக நாயகி என்ற விருது நேற்று கிடைத்துள்ளது. இந்த விருது மலேசியாவில் நடைபெற்ற ஒரு விழாவில் வழங்கப்பட்டுள்ளது. ஆக, தனது பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாடியிருக்கிறார் மஞ்சிமா.
இதையடுத்து, இந்த பிறந்த நாளில் இதுவரையில்லாத அளவுக்கு நான் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்று கூறியுள்ள மஞ்சிமா மோகன், இணைய பக்கத்தில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.