சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
தனிஒருவன், போகன் படங்களில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி, மறுபடியும் ஹீரோ ரூட்டை பிடித்து விட்டார். தற்போது வணங்காமுடி, சதுரங்கவேட்டை-2, நரகாசுரன் உள்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் வணங்காமுடியில் ரித்திகா சிங்கும், சதுரங்கவேட்டை-2வில் சாந்தினியும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். கதைப்படி, அவரது மனைவியாக நடிக்கிறார்கள்.
குறிப்பாக, இந்த மாதிரியான கதைகளைத்தான் செலக்ட் பண்ணி நடிக்கிறார் அரவிந்த்சாமி. காரணம், தற்போது தான் நடுத்தர வயது கொண்ட ஹீரோவாகி விட்டதால், திருமணமான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் தனக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறார் அரவிந்த்சாமி. அதனால், இந்த படங்களில் திருமணமானவராகவே நடிக்கும் அவருக்கு மனைவி, குழந்தைகள் இருப்பது போலவே கதையமைக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி யாராவது டைரக்டர்கள், ஒரு டூயட் பாடல் வைக்கலாமே என்று அவரிடம் கேட்டுக்கொண்டால், இன்றைய ரசிகர்களின் ரசனை வேறு மாதிரியாக இருக்கிறது. ஒருகாலத்தில் 60 வயதான ஹீரோக்கள் கல்லூரிக்கு சென்றார்கள், டூயட் பாடினார்கள். அதை அப்போதைய ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இப்போது அதையெல்லாம் ஏற்க மாட்டார்களாம். அதனால் காலத்திற்கேற்ப ரசனைகளுக்கேற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நடிராக இருக்க முடியும் என்கிறாராம் அரவிந்த்சாமி.